Skip to main content

விஷவாயுக் கசிவு; நிறுவனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை - தொழில்துறை அமைச்சர் பேட்டி...

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

Andhra Pradesh Industries Minister MG Reddy about vizag gas leak

 

ஆந்திர விஷவாயுக் கசிவுக்குக் காரணமான நிறுவன நிர்வாகத்திடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநிலத் தொழில்துறை அமைச்சர் எம்.ஜி.ரெட்டி தெரிவித்துள்ளார். 


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாயுடுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடப்புரத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பாலிமர்ஸ் (LG Polymers industry) இரசாயன ஆலையில் இன்று (07/05/2020) அதிகாலை ஏற்பட்ட விஷவாயுக்கசிவால், அப்பகுதியில் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு விஷ வாயு பரவியது. இந்த விஷவாயுக் கசிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8- ஆக  உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த ஆந்திர மாநிலத் தொழில்துறை அமைச்சர் எம்.ஜி.ரெட்டி, "தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், உடனடியாக அந்தப் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகள் தொடங்கப்பட்டன. உள்ளூர் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விஷவாயு பாதிப்பில்லாத திரவ வடிவத்திற்கு மாற்றப்பட்டுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சிறிய அளவு வாயு தொழிற்சாலை வளாகத்திலிருந்து வெளியேறி அப்பகுதியில் உள்ள மக்களைப் பாதித்துள்ளது. இந்த விபத்துக்கு அந்நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும். அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளும் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து நிறுவன நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்படும். அதன்படி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.