Skip to main content

பாஜகவுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஜெகன்?

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று முதன் முறையாக ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். அவருடன் 25 அமைச்சர்கள், 5 துணை முதல்வர்கள் என 30 எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். முதல்வராக பதவியேற்கும் முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆந்திர மாநில வளர்ச்சிக்கு உதவுமாறும், தமது பதவியேற்பு விழாவிற்கு வருமாறும் ஜெகன் பிரதமரை கேட்டுக்கொண்டார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு வழங்கும் என ஜெகன்மோகன் ரெட்டிக்கு உறுதியளித்துள்ளார்.  

 

 

ANDHRA PRADESH CM JAGANMOHAN REDDY TODAY ARRIVE AT DELHI MEET WITH HOME MINISTER AMIT SHAH

 

 


இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்தார். அப்போது பிரதமருடன் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டார். அதன் பிறகு பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஜெகன் கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கினார். இந்நிலையில் இன்று டெல்லியில் பாஜக கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஸாவை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசவுள்ளார். இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இணைவது குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

ANDHRA PRADESH CM JAGANMOHAN REDDY TODAY ARRIVE AT DELHI MEET WITH HOME MINISTER AMIT SHAH

 

 

அதே போல் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்தும், மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும் என முதலவர் ஜெகன் அமைச்சர் அமித்ஸாவிடம் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பாஜக கட்சிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டு வரும் மசோதாக்கள் அனைத்தும் எளிதாக நிறைவேற்ற முடியும். அதே போல் மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகரிக்கும். மாநிலங்களவையில் பாஜகவிற்கு மசோதாவை நிறைவேற்ற போதிய பலம் இல்லை. இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பாஜக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Stone pelting on Jagan Mohan Reddy


ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை; ஆனால் ஒரு கண்டிஷன்’ - சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Chandrababu Naidu's promise Stipend for Backward People at lok sabha election campaign

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களைக் கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உயிர் துறந்த மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 197வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைந்ததும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். அதில், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார். 

இவர் ஏற்கனவே, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்தால், தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.