Andhra Pradesh Atchutapuram SEZ pharma company boiler incident

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி அருகே உள்ள அச்சுதபுரம் என்ற இடத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) உள்ளது. இங்கு பர்மா கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (21.08.2024) மதியம் இங்குள்ள பாய்லர் தீடிரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த தீ விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் தீயை கட்டுப்படுத்தப்பட்ட பிறகு கம்பெனியின் உள்ளே சென்று பார்த்தபோது 4 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் பாய்லர் வெடித்துத் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து அனகாபள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இது தொடர்பாக அனகாபள்ளி கூடுதல் போலீஸ் எஸ்.பி. தேவ பிரசாத் கூறுகையில், "காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் நிலைமை சீராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.