Skip to main content

நில இழப்பீடு விவகாரம்: ஐந்து ஐ. ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சிறை தண்டனை - ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

andhra highcourt

 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சாவித்ரம்மா என்பவரது நிலத்தை, கடந்த 2016ஆம் ஆண்டு மனநலம் குன்றியவர்களுக்கான தேசிய நிறுவனத்தை அமைக்க மாநில அரசு கையகப்படுத்தியது. இருப்பினும் நிலத்தைக் கையகப்படுத்தியதற்கான இழப்பீடு   சாவித்ரம்மாவுக்கு வழங்கப்படவில்லை.

 

இதனையடுத்து கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கோரி சாவித்ரம்மா ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்று மாதத்திற்குள் நிலத்திற்கான இழப்பீட்டை வழங்க ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் சாவித்ரம்மாவுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

 

இதனையடுத்து சாவித்ரம்மா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்துவந்த ஆந்திர உயர் நீதிமன்றம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உட்பட ஐந்து பேருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், நெல்லூர் மாவட்டத்தின் முதன்மை வருவாய் செயலராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு நான்கு வார சிறை தண்டனையும் 1,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ். ராவத்துக்கு ஒருமாதம் சிறையும் 1000 ரூபாய் அபராதமும், நெல்லூர் மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியருக்கு இரண்டு வார சிறையும் 1000 ரூபாய் அபராதமும் ஆந்திர உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லூர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர்கள் இருவருக்கு 2,000 ரூபாய் அபராதமும் ஒருவார சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.