Skip to main content

ஜெகன்மோகன் ரெட்டியின் கனவைத் தகர்த்த நீதிமன்றம்! நீதிபதிகளின் பரபரப்பு தீர்ப்பு!

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

andhra court orders government to built capital in amaravathi

 

கடந்த 2014 ஆம் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆந்திரா மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டதோடு, தெலங்கானாவின் நிரந்தர தலைநகராக ஹைதராபாத் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு புதிய தலைநகரை அமைக்கும் பணிகளில் மும்முரமான ஆன அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. குண்டூர்-விஜயவாடா இடையே அமராவதியில் தலைநகரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை அரசுக்கு வழங்கினர். அதனைத்தொடர்ந்து, அங்கேயே தற்காலிகமாகத் தலைமைச் செயலகம், சட்டப் பேரவை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு பேரவை கூட்டங்களும் நடத்தப்பட்டன.

 

ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், ஆந்திராவுக்கு மூன்று தலைநகர்களை அமைக்க உள்ளதாகவும், அதன்படி, அமராவதியில் சட்டப்பேரவையும், கர்னூலில் உயர்நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் செயல்படும் எனவும் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஜெகன்மோகன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்நிலையில், தலைநகரை அமராவதியில் தான் அமைக்க வேண்டும் என நிலம் கொடுத்த விவசாயிகள் 70 பேர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். மேலும், சுமார் இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டனர். 

 

இந்நிலையில், விவசாயிகள் தொடர்ந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், "விவசாயிகள் மற்றும் முந்தைய அரசுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இன்னமும் 6 மாதங்களில் அமராவதியில் தலைநகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளானை நிறைவு செய்ய வேண்டும். நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஒப்பந்தத்தில் கூறியபடி, வீட்டு மனைப் பட்டாக்களையும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து பெற்ற நிலங்களைத் தலைநகர் அமைப்பதற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். தற்போது அமராவதியில் உள்ள எந்த அரசு அலுவலகத்தையும் வேறு ஊர்களுக்கு மாற்றக்கூடாது. விவசாயிகளுக்கு வழக்கு செலவாக 50 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கிட வேண்டும்" எனப் பரபரப்பு தீர்ப்பளித்தது.

 

நீதிமன்றத்தின் இந்த தீப்பின் மூலம் ஜெகன்மோகனின் நீண்டகால கனவு தகர்ந்துள்ள நிலையில், விவசாயிகள் இத்தீர்ப்பினை கொண்டாடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.