Skip to main content

தங்கை மீது பாசம் காட்டிய பெற்றோர்... கோபத்தில் ஐந்து வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு...

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

andhra child incident

 

 

தனது பெற்றோர் புதிதாகப் பிறந்த தனது தங்கை மீது பாசம் காட்டியதால், ஆத்திரமடைந்த ஐந்து வயது சிறுமி, தனது தங்கையை நீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. 

 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவ்யா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில், 11 மாதங்களுக்கு முன்னர் மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மூவரும் தங்களது வீட்டில் வசித்துவந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தை காணாமல் போயுள்ளது. இதனால் அச்சமடைந்த தாய் காவியா அக்கம்பக்கத்தில் தனது குழந்தையைத் தேடியுள்ளார். எங்குத் தேடியும் குழந்தை கிடைக்காததை தொடர்ந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

பின்னர், வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததாகவும் எனவே தங்கையைத் தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாகவும், அக்கா நிர்மலா அப்பாவியாகக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயும், போலீஸாரும் செய்வதறியாது குழம்பியுள்ளனர். பின்னர், குழந்தை நிர்மலா மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் முடிவில் போலீஸார் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.