Skip to main content

“மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

Anbumani Ramadoss insists that "NEET examination for medical studies should be postponed"

 

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மே 21-ஆம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை மருத்துவ நீட் (NEET - PG) தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மருத்துவ மாணவர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளன. அந்த கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றை  மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த ஓ.பி.சி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக 2021-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மிகவும் தாமதமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதனால் மாணவர் சேர்க்கை தாமதமாகக் கூடும்.

 

கலந்தாய்வு தாமதமானதால், 2021-ஆம் ஆண்டில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களால், 2022ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராக முடியவில்லை. திட்டமிட்டபடி நீட் தேர்வுகள் 21-ஆம் தேதி நடத்தப்பட்டால், பல மாணவர்களுக்கு வெற்றி பெற சமவாய்ப்பு கிடைக்காது. நீட் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி தான் நடைபெற்றது. மாணவர்கள் நலனே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடப்பாண்டிற்கான முதுநிலை மருத்துவ நீட் (NEET - PG) தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் ஒத்திவைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்