Skip to main content

அமிர்தசரஸ் ரயில் விபத்து; நடந்தது எப்படி காரணம் என்ன?

Published on 20/10/2018 | Edited on 20/10/2018

அமிர்தசரஸில் ஏற்பட்ட கோர ரயில் விபத்துக்கான காரணம் மற்றும் எப்படி இந்த விபத்து நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

TRAIN

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த விழாவானது ரயில் பாதை உள்ள இடத்தில் அதுவும் ஆளில்லா ரயில்வே பாதையின் அருகே கொண்டாடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புக்கு ஒரு ரயில்வே போலீசார் கூட இல்லை. அதேபோல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் எந்த முன்னேற்பாடும் விழாக்குழுவினரால் செய்யப்படவில்லை. மேலும் அந்த ரயில்வே கிராஸிங்கில் வேலிகள்கூட இல்லாத நிலையில் நிறைய பக்தர்கள் ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு மொபைலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். 

 

 

விழாவில் ராவண வதத்தின் போது,  ராவண உருவபொம்மையில் இருந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ,  மக்கள் அலறியடித்து  ரயில்வே கேட் நோக்கி ஓடினர்.  கூட்டம் அதிகமாக இருந்ததால் தண்டவாளத்தின் அருகே ஏராளமானோர் நின்றிருந்தனர்.  சிலர் தண்டவாளத்தை கடந்து அந்த பக்கம் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பாராத விதமாக  27வது ரயில்வே கேட் வழியாக மின்னல் வேகத்தில் புறநகர் ரயில் எண் 74943 சென்றது.  பட்டாசு சத்தத்தினால் ரயில் வந்த சத்தம் மக்களுக்கு கேட்கவில்லை.  இதனால், ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற இந்த ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றிருந்த மக்கள் மீது மோதியது.  இந்த கோர விபத்தில் 50 பேர் பலியானதாக முதல்கட்ட செய்திகள் வர தற்போது பலி எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் ரயில் ஒலியெழுப்பவில்லை பட்டாசு சத்தத்தில் ரயில் சைலன் ஓசைக்கூட கேட்கவில்லை என காயமடைந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு மொபைலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். மக்களின் இந்த அஜாக்கிரதையாக போக்குதான் இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

 

TRAIN

 

இந்த கோரவிபத்திற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி உயிரிழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை அறிவித்துள்ளார். மேலும் பஞ்சாப் அரசின் சார்பாக உயிரிழந்தவர்களுக்கு ஐந்துலட்சம் நிவாரண தொகையும் காயமடைந்தோர் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிக்சை எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப்பில் இன்று துக்கநாளாக கொண்டு அரசு அலுவலங்கள், பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரயிலில் பயங்கர தீ விபத்து; விரைந்த தீயணைப்புத் துறையினர்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Terrible train fire in maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நான்டெட் நகரில் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில், பூர்ணா - பார்லி வழிச் செல்லும் ரயில் (வண்டி எண் : 07599) நின்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30 நிமிடத்திற்கு மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து, மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.