Advertisment

பாதுகாப்பு படை வீரர்கள் பலியான இடத்திற்கு நேரில் செல்லும் அமித்ஷா!

AMIT SHAH

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் - சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் (Central Reserve Police Force), ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் (Special Task Force), மாவட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர், கமாண்டோ பட்டாலியன் ரெசலூட் ஆக்சன் (Commando Battalion for Resolute Action) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இணைந்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் நேற்று (03/04/2021) அதிரடியாக ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 22 வீரர்கள் வீர மரணமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு வீரரைக் காணவில்லை, அவரை தேடும் பணிதொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Advertisment

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் மாநில தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் முடித்துக்கொண்டார். அம்மாநிலத்தில் மொத்தம் மூன்று பேரணியில் கலந்துகொள்ளஇருந்த அவர், ஒரு பேரணியில் கலந்துகொண்டநிலையில், சத்தீஸ்கர் சம்பவத்தைப் பற்றி தகவல் கிடைத்ததும் டெல்லி திரும்பினார். இதனைத்தொடர்ந்து இன்று (05.04.2021) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்வையிடுவதோடு, காயமடைந்த வீரர்களை மருத்துவமனையில் சந்திக்கவுள்ளார்.

AmitShah chhattisgarh Maoist
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe