Advertisment

"கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட்...

amitshah recovered from covid 19

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்துள்ளார்.

Advertisment

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷாவுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

Advertisment

இந்நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். என்னையும் எனது குடும்பத்தினரையும் ஆசிர்வதித்த அனைவருக்கும் நன்றி. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

AmitShah corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe