Skip to main content

ஈரோட்டில் அமித் ஷா; கூட்டணி முடிவு அறிவிப்பு..?

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

 

dfgdfgdf

 

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஈரோடு வருவதாக அக்கட்சியின் தமிழக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தமிழகத்தில் பாஜக குறிப்பிட்ட தொகுதிகளை தங்கள் வசமாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்தியிலும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க‌ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கடந்த ஒரு மாத காலத்‌தில் மதுரைக்கும் திருப்பூருக்கும்‌ வந்து சென்றுள்ளார். மேலும் வரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர உ‌ள்ளார். இந்நிலையில், அமித் ஷா இன்று ஈரோடு வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் கூட்டணி குறித்து பல்வேறு பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில், அமித் ஷாவின் இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்