“மம்தா நடத்தும் ஆட்சியால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்து” - அமித்ஷா 

Amit Shah said Mamta's regime is a danger to the entire country

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்கம் மாநிலம், காந்தி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் இன்று (22-05-24) தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நேற்று நான் இங்கு இறங்கிய பிறகு, பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரியின் வீடுகள் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டதாக எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. மம்தா பானர்ஜி தனது கட்சியின் தோல்வியால் மிகவும் பயந்து, இதுபோன்ற தந்திரங்களை கையாள்கிறார். உங்கள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ரூ.51 கோடி மீட்கப்பட்டது. நேற்றைய சோதனைக்குப் பிறகு சார் 25 பைசா கூட மீட்க முடியவில்லை.

நாங்கள் பாஜக, நாங்கள் பயப்படவில்லை. நீங்கள் தொடர்ந்து மாநில காவல்துறையை தவறாக பயன்படுத்தினால், நீங்கள் வெற்றிபெறக்கூடிய இரண்டு முதல் நான்கு இடங்களை இழக்க நேரிடும். சுவேந்து அதிகாரியை நீங்கள் எவ்வளவு அதிகமாக குறிவைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவர் உங்களுக்கு எதிரான தலைவராக எழுவார். வங்காளத்தில் 30 இடங்கள் கிடைத்தால், திரிணாமுல் காங்கிரஸ் உடைந்து, சிறிது நேரத்தில் ஆட்சி கவிழும்.

ஊடுருவல்காரர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாநிலம் மாறியுள்ளது. நீங்கள் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டிருப்பதால் இது பாவம் அன்றி வேறில்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி நடத்தவில்லை. அவர் ஒரு மாஃபியாவை நடத்தி வருகிறார். இந்த மாஃபியா, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும். இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஆபத்தானது. மேலும், இது மாநிலத்தின் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு ஆபத்து என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

AmitShah
இதையும் படியுங்கள்
Subscribe