குஜராத்தில் கடந்த திங்கட்கிழமையன்று அம்பஜி- தண்டா வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் கோவிலுக்கு சென்ற 22 பேர் பலியாகினர்.

ambaji bus accident update

Advertisment

Advertisment

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பேருந்து விபத்துக்கு முன் ஓட்டுனர் வெளியிட்டதாக கூறப்படும் டிக் டாக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கும் போதே அவர் டிக் டாக் செய்துள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பதிவிட்ட சிறிது நேரத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்து விபத்துக்குள்ளானது முதல் அந்நிறுவனம் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், அதன் மேலாளரும் தலைமறைவாக இருந்து வருகிறார்.