இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தநிலையில், ஆந்திர மாநிலத்திலும் கரோனாபரவல் அதிகரித்து வருகிறது.
மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து எழுத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து ஜூன் முதல் வாரத்தில் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேர்வுகளைநடத்திக் கொள்ளலாம்எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.