Skip to main content

வழக்கறிஞர் தீபிகா சிங்கைப் பாராட்டிய எம்மா வாட்சன்!

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

கத்துவா சிறுமி வழக்கில் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் வழக்கறிஞர் தீபிகா சிங்கை ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பாராட்டியுள்ளார்.

 

ஜம்மு மாநிலம் கத்துவாவில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, தொடர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, இதுதொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்காக வாதாடும் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவத் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்தது. 

 

இதுகுறித்து பேசியிருந்த தீபிகா சிங், நான் பாலியல் வன்புணர்வு செய்யப்படலாம். கொல்லப்படலாம். இந்த வழக்கில் வாதாட முடியாமல் போகலாம். நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடி நீதியை நிலைநாட்டவே விரும்புகிறேன்’ என தெரிவித்திருந்தார். 

 

 

நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு வழக்கில், குற்றவாளிகளாக கருதப்படுபவர்களுக்கு அரசியல் மற்றும் பணபலம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களை எதிர்த்து ஒரு பெண்ணாக அச்சுறுத்தல்களை சந்தித்துக் கொண்டே, சட்டப்போராட்டம் நடத்தும் தீபிகா சிங் பலராலும் பாராட்டப்பட்டார். அவர்குறித்து வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன், ‘எல்லா சக்தியும் தீபிகா சிங் ராஜாவத்திற்கே’ என பதிவிட்டிருந்தார். நடிகை எம்மா வாட்சன் பெண் விடுதலை குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கத்துவா வழக்கில் தீர்ப்பு... அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

ஜம்மு மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கடத்தப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

 

kathua case final verdict by pathankot court

 

 

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், வழக்கை மூடிமறைக்க முயன்ற உள்ளூர் காவலர்கள் என ஏழு பேரின் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜம்முவின் கத்துவா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்த மிரட்டல்கள் காரணமாக பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள பதான்கோட் நீதிமன்றம், தீபக் கஜூரியா, பர்வேஷ் குமார், சாஞ்ஜி ராம், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும் இவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரீந்தர் ஆகிய மூவருக்கும் ஐந்தாண்டுகள் சிறை தண்டனையோடு, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாஞ்ஜி ராமின் மகன் விஷால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என நாடே எதிர்பார்த்த நிலையில் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் என தண்டனை வழக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

Next Story

கத்துவா சிறுமி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

ஜம்மு மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கடத்தப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், வழக்கை மூடிமறைக்க முயன்ற உள்ளூர் காவலர்கள் என ஏழு பேரின் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

 

kathua case verdict by punjab court

 

 

இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜம்முவின் கத்துவா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்த மிரட்டல்கள் காரணமாக பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள பதான்கோட் நீதிமன்றம் 6 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தீர்பளித்துள்ளது. இந்த 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கான தண்டனை குறித்து விவரங்கள் மாலை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.