Skip to main content

நவராத்திரி விழா தொடங்கியது... நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!  (வீடியோ )

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

நவராத்திரி விழா நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. அதை தொடர்ந்து அக்டோபர் 7- ஆம் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
 

நவராத்திரியின் முதல் நாளான இன்று  (29/092019) காலை டெல்லி, கொல்கத்தா, வாரணாசி, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் காலை முதலே கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் நவராத்திரி விழாவை முதலமைச்சர் மம்தா பானர்ஜி துவக்கி வைத்தார். துர்கா பூஜைக்காக அவர் எழுதிய பாடல் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. குறிப்பாக ஜம்மு& காஷ்மீரில் நவராத்திரி விழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன.

ALL OVER INDIA PEOPLES CELEBRATING THE NAVRATRI FESTIVAL

குஜராத் மாநிலத்தில் நவராத்திரி காலங்களில் புகழ்பெற்றவை கார்பா நடனங்கள். இந்த ஆண்டும் வதோதரா நகரில் வழக்கமான உற்சாகத்துடன் கார்பா நடனப் பயிற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தாண்டியா நடனம் ஆடி பெண்கள் உற்சாகமாக நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றனர். 

ALL OVER INDIA PEOPLES CELEBRATING THE NAVRATRI FESTIVAL

உலக அளவில் பிரசித்தி பெற்ற கர்நாடக மாநிலம் 'மைசூரு தசரா' விழா கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இன்று காலை சாமுண்டி மலையில் நாவலாசிரியர் பைரப்பா சாமுண்டீஸ்வரிக்கு மலர் தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மைசூர் மன்னர் வம்சத்தினர், முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 

ALL OVER INDIA PEOPLES CELEBRATING THE NAVRATRI FESTIVAL

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய கோவில்களில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.