Skip to main content

அதிக வாக்குகள் பதிவான மாநிலம்!

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பதிவான மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாகவே மக்களவை தேர்தல் ஆனது நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சித் தலைவர்களுக்கிடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்காக  மேற்கு வங்கத்திற்கு வரும் பாஜக தலைவர்கள் மற்றும் முதல்வர்களின் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க தடை, பாஜக பேரணிக்கு தடை என கடுமையான தடைகளை விதித்தார்.

 

 

WEST BENGAL

 

 

 

இதனால் இரு கட்சிகளும் மாறி மாறி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்தனர். மேலும் ஒவ்வொரு நாளும் மக்களவை தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக கட்சியின் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தார். அதே போல் பானி புயலால் மேற்கு வங்கத்தில் பாதிப்பு ஏற்பட அது குறித்த நிலவரங்களை கேட்டறிய முதல்வர் மம்தா பானர்ஜியை  பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி தொடர்பு கொண்டதாகவும் ஆனால் மம்தா தொலைப்பேசி அழைப்பை ஏற்க மறுத்து விட்டார் என பிரதமர் மோடியே மேற்கு வங்க பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். மேலும் கடைசிக் கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட பேரணியில் அமித்ஷா பங்கேற்றார். இந்த பேரணியின் போது பாஜக. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் கடும் வன்முறையாக மாறியது.

 

 

MAMATA

 

 

இதில் மேற்கு வங்கத்தின் முக்கிய தலைவர் ஈஸ்வர் வித்யாசாகர் சிலை சேதமானது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்ட மக்களவை தேர்தலிலும் மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல், வாக்குச்சாவடிகளில் பதற்றம் போன்ற சூழல் ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் மீறி மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் சராசரியாக சுமார் 80% விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பதிவான மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது.

 

LOK SABHA ELECTION (WEST.BEN STATE)    PHASE WISE  VOTES
   PHASE-1`                         83.80 %                           69.50%
   PHASE-2                          81.72 %                           69.44%
   PHASE-3                          81.97 %                           68.40%
   PHASE-4                          82.84 %                           65.50%
   PHASE-5                          80.09 %                           64.16%
   PHASE-6                          80.16 %                           61.14%     
   PHASE-7                          73.51 %                           63.98%

 

 

 

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் வாக்கு சதவீதம் குறைவு என்பது அனைவரும் அறிந்தது. மேற்கு வங்க மாநில மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதையும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு மேற்கு வங்க மக்கள் நமக்கு உதாரணமாக இருக்கின்றனர். எனினும் 17-வது மக்களவை தேர்தலில் சராசரியாக 67% விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அக்பர் - சீதா’ சர்ச்சை; சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட புதிய பெயர்கள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
New names given to lions on 'Akbar - Sita' Controversy

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவைத் தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். இதனால் அந்தச் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல நானும் ஆதரிக்கவில்லை. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள். எனவே இது போன்ற பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே, சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கும் வேறு பெயர்களை வைக்க வேண்டும்” என்று கூறி மாநில அரசிற்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டது.

இந்த நிலையில், அக்பர் - சீதா பெயரால் சர்ச்சையில் சிங்களுக்கு புதிய பெயரை வைக்க மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. அதில், அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு ‘சூரஜ்’ என்ற பெயரும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு ‘தயா’ என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு பரிந்துரைத்துள்ளது.

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.