Skip to main content

"இந்த மூன்று பிரச்சனைகள் தேர்தலில் பாஜகவின் தலைவிதியை தீர்மானிக்கும்" - அகிலேஷ் யாதவ்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

akilesh yadav

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக விஜய ரத யாத்திரையை நடத்திவருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தின் ஜான்சியில் நடைபெற்ற விஜய ரத யாத்திரை கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், நகரங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களை மாற்றுவதுதான் பாஜகவிற்குத் தெரிந்த ஒரே வளர்ச்சி என விமர்சித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "அவர்களுக்கு (பாஜக) ஒருவகையான வளர்ச்சி மட்டுமே தெரியும். அது நகரங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயரை மாற்றுவது. அவர் (யோகி ஆதித்யநாத்) இங்கு வந்திருந்தால், சிர்கானின் பெயரும் மாறியிருக்கும். அவர் உள்கட்டமைப்பு, மேம்பாடு தொடர்பான போலியான புகைப்படங்களை வெளியிடுகிறார். எங்கள் வளர்ச்சிப் பணிகளைத் துவக்கிவைத்துக்கொண்டிருக்கிறார்" என கூறியுள்ளார்.

 

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "பாஜகவின் போலி வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வராமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்வார்கள். பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விவசாயிகளின் வருமானம் குறைந்தது ஆகிய பிரச்சனைகள், வரவிருக்கும் தேர்தலில் பாஜகவின் தலைவிதியைத் தீர்மானிக்கும். சமாஜ்வாடி கட்சியால் 22 மாதங்களில் விரைவுச் சாலையை அமைக்க முடியுமென்றால், பாஜக அதே பணியை செய்ய ஏன் 4.5 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது? உத்தரப்பிரதேச மக்களின் நலனுக்காக அவர்கள் உழைக்க விரும்பாததே இதற்குக் காரணம். வரவிருக்கும் தேர்தலில் காங்கிரசுக்கு 0 இடங்கள்தான் கிடைக்கும்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.