மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் மோசமான தோல்வியை சந்தித்தன. பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் வேண்டாம் என கூறி, இந்த இரண்டு கட்சிகளும் வேறு இரண்டு சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்நிலையில் இந்த தேர்தலில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியக்கு பிறகு இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் பிஎஸ்பி, எஸ்பி ஆகிய கட்சிகளின் கூட்டணி முறியும் நிலையில் அங்கு அடுத்து வரும் இடைத்தேர்தலை இரண்டு கட்சிகளும் தனித்தே சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் அறிவித்துள்ளார்.
இதனால் அம்மாநில தோநாடார்கள் மற்றும் மற்ற அரசியல் கட்சியினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே இரண்டு கட்சிகளும் இணைந்தபோதும் தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையில், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி என முக்கிய கட்சிகள் தனித்து இருப்பது பாஜகவுக்கு தான் பலம் என அரசியல் விமர்சகர்களும், தொண்டர்களும் தெரிவித்து வருகின்றனர்.