Advertisment

உத்தரப்பிரதேச தேர்தல்; முடிவை மாற்றிக்கொள்ளும் அகிலேஷ் யாதவ்? 

akhilesh yadav

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் ஏழாம் தேதிவரைஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில்உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்த அகிலேஷ் யாதவ், தற்போது தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

கடந்த முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டு,அதன்மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வரானயோகி ஆதித்யநாத், இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அகிலேஷ் யாதவ் மற்றும் யோகி ஆதித்யநாத் இருவரும் உத்தரப்பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இருவரும் இதுவரை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe