Skip to main content

வாடிக்கையாளர்களுக்கு "லைப் இன்சூரன்ஸ் பாலிசி திட்டம்" ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு!

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான 'ஏர்டெல் நிறுவனம்'  (AIRTEL) தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் படி முதல் திட்டத்தில்  ரூபாய் 129 க்கு ரீ-சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபியாக இருந்த டேட்டாவை 2ஜிபியாக உயர்த்தியுள்ளது. அதே போல் மற்றொரு திட்டத்தில் ரூபாய் 249 க்கு ரீ-சார்ஜ் செய்தால் ரூபாய் 4 லட்சத்திற்கு லைப் இன்சூரன்ஸ் பாலிசி (LIFE INSURANCE POLICY VALUE 4 LAKHS) வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு திட்டத்தையும் முழுமையாக பார்க்கலாம்.

ஏர்டெல் ரூபாய் 129 ரீ-சார்ஜ்க்கான திட்ட விவரங்கள் 
இந்த திட்டத்தில் ரூபாய் 129 க்கு ரீ-சார்ஜ் செய்தால் உங்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவும், நாள் ஒன்றுக்கு 100 சாதாரண மெசேஜ்களும் , அளவற்ற தொலைப்பேசி அழைப்புக்களையும் வழங்கியுள்ளது. இதன் வேலிடிட்டி நாட்கள் 28 நாள் ஆகும். அதே போல் ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக் ஒரு மாத சந்தாவை ஆகிய இரண்டிற்கும் ஒரு மாத சந்தாவை இலவசமாக வழங்கியுள்ளது.

 

AIRTEL

 


ஏர்டெல் ரூபாய் 249 ரீ-சார்ஜ்க்கான திட்ட விவரங்கள் 
இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் மெசேஜ் , அழைப்புகளில் எந்த வித மாற்றமும் கொண்டு வராத ஏர்டெல் நிறுவனம் , ரூபாய் 4 லட்சத்திற்க்கான "லைப் இன்சூரன்ஸ்" வழங்கப்படும் எனவும், அதை ஹெச்டிஎப் லைப் மற்றும் பாரதி ஆக்சா நிறுவனம் மூலம் வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் இந்த திட்டத்தில் ஏர்டெல் டிவி , வின்க் மியூசிக் சந்தா , நீங்கள் புது மொபைலை வாங்கினால் ரூபாய் 2000 வரை தள்ளுபடி மற்றும் ஒரு வருட நார்டன்  செக்கியூரிடி  உள்ளிட்ட சலுகைகளை வழங்கவுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

AIRTEL

 

லைப் இன்சூரன்ஸ் பாலிசியை வாடிக்கையாளர்கள்  பெற சில விதிமுறைகளை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்களின் வயது 18 முதல் 54 வரை இருக்க வேண்டும். அதே போல் இந்த திட்டத்தில் கீழ் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். மேலும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை மொபைல் மூலம் விண்ணப்பிக்கலாம்.அதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக ஏர்டெல்  நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலும் , ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கும் சென்று வாடிக்கையாளர்கள் இந்த லைப் இன்சூரன்ஸ்க்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைக்களை போட்டி போட்டு வழங்கும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் இத்தகைய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏர்டெல் கட்டணம் 57% கிடுகிடு உயர்வு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Published on 21/11/2022 | Edited on 22/11/2022

 

h

 

ஏர்டெல் நிறுவனம், அடிப்படை சேவைக் கட்டணத்தை, 99 ரூபாயிலிருந்து 155 ரூபாயாக,  57% உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்த கட்டண  உயர்வை, இந்தியாவிலுள்ள ஹரியானா, ஒடிஷா மாநிலங்களில் தற்போது அமல்ப்படுத்தியுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழும் விமர்சனங்களைப் பொறுத்து, அடுத்தகட்டமாக இந்தியா முழுவதும் கொண்டுவரவுள்ளது. தற்போதுள்ள பொருளாதாரச் சரிவு நிலையில், இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளது.

 

டிஜிட்டல் இந்தியா உருவாக்கத்தில் ஒன்றிய அரசு காட்டிவரும் அபரிமித ஆர்வத்தால், ஸ்மார்ட் போன் பயன்பாடு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை போன்றவை வெகுவேகமாகப் புழக்கத்துக்கு வருகிறது. 2016ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ சந்தைக்குள் அதிரடியாக வந்து, அன்லிமிடேட் டேட்டா பயன்பாட்டை வழங்கி, மற்ற செல்பேசி நிறுவனங்களுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பாரதப் பிரதமர் மோடியே ரிலையன்ஸ் ஜியோவிற்கு விளம்பர மாடல் போல போஸ் கொடுத்தது அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

 

ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் ஏர்டெல் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.  வோடஃபோன், ஐடியா நிறுவனங்களும் ஆட்டம் கண்டு, தாக்குப்பிடிப்பதற்காக  இரண்டும் ஒன்றாக இணைந்தன. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சிதைக்கப்பட்டது. ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் பெருத்த நட்டத்தைச் சந்தித்து, கடனில்  தத்தளித்தன. இதிலிருந்து மீள்வதற்காக அவ்வப்போது, பல்வேறு விதங்களில் கட்டணங்களை உயர்த்திவந்தன. இதற்கிடையே கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் கரோனாவினால் ஏற்பட்ட பொதுமுடக்கம், ஆன்லைன் கல்வியைப் பெருமளவு பரவலாக்கியது. இதன் காரணமாக, அனைத்து மாணவர்களும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். எனவே செல்பேசி சேவைக்கான தேவை அதிகரித்தது. இது செல்பேசி  நிறுவனங்களுக்கு ஜாக்பாட் போல அமைந்தது. இந்தியாவில் கடந்த 2021 கணக்கீட்டின்படி, 12 கோடி பேர் செல்பேசிப் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். 

 

இவர்களின் 7.5 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் 10 கோடி ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களாக அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக, செல்பேசி நிறுவனங்கள் மீண்டும் சிக்கலைச் சந்திக்கின்றன. எனவே இதைச் சமாளிப்பதற்காக, குறைந்தது 20% அளவிற்கு கட்டண உயர்வு இருக்குமென எதிர்பார்த்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக 57% கட்டண உயர்வை அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விரைவில் கட்டண உயர்வை அறிவிக்கவுள்ளன. ஸ்மார்ட்போன்களுக்குப்  பழக்கப்பட்டுப்போன மக்கள் இதிலிருந்து தப்புவது கடினமே! 

 

- தெ.சு.கவுதமன்


 

Next Story

சென்னையில் உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

 5G in 8 cities including Chennai

 

அதிவேக இணைய வசதியை வழங்கவுள்ள 5ஜி தொழில்நுட்பம், இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி அக்.1 ஆம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட எட்டு மாநகரங்களில் 5ஜி தொழிற்ப சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் தீபாவளியையொட்டி 5ஜி சேவையை பெறலாம் என  அந்நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் ஆகிய நகரங்களில் அந்த சேவையை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. 5ஜி வசதி உள்ள செல்போன்களில் 5ஜி சேவைக்கான குறுஞ்செய்தி மூலம் தகவல் வாடிக்கையாளர்களுக்கு தகவல் வரும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.