ADVERTISEMENT

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு சிதம்பரத்தை கைது செய்ய தடை!!

09:55 AM Jul 10, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் இன்று நடந்த விசாரணையில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7-ஆம் தேதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் குறித்த விசாரணையில் ஜூலை 10-ஆம் தேதிவரை கைது செய்ய தடை நீட்டிக்கபட்டிருந்தது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஏர்செல் பங்குகள் மலேசியாவிலுள்ள மேக்சிஸ் நிறுவனத்தில் விற்கப்பட்டதில் முறைகேடுகள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.

மேலும் இந்த வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டுமென டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த விசாரணையில் ஜூலை 10-ஆம் தேதிவரை அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்திது வழக்கு விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனை அடுத்து இன்று நடந்த விசாரணையில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7 -ஆம் தேதிவரை தடை விதித்துள்ளது. மேலும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தையும் கைது செய்ய தடை விதித்துள்ளது வழக்கை ஆகஸ்ட் 7 தேதி தள்ளிவைத்துள்ளது பாட்டியாலா நீதிமன்றம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT