air india express flight incident at vijayawada international airport

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள கண்ணவரம் சர்வதேச விமான நிலையத்தில் 'ஏர் இந்தியா விமானம்' (IX-1676) தரையிறங்கிய போது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் மோதியது. இருப்பினும் விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாகத்தரையிறங்கியது. இதனால் விமானத்தில் இருந்து 64 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த தகவலை விமான நிலையத்தின் இயக்குனர் மதுசூதன் ராவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisment

air india express flight incident at vijayawada international airport

Advertisment

இந்தச்சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விசாரணைக்கு விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.