ADVERTISEMENT

இங்கிலாந்து முடிவால் விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா!

03:42 PM Apr 21, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா அதிகரித்து வருவதால், இந்தியாவை இங்கிலாந்து ரெட் லிஸ்டில் இணைத்துள்ளது. இதனால் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் வசிக்காதவர்களோ, பிரிட்டிஷ் குடிமக்களாக இல்லாதவர்களோ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இங்கிலாந்து செல்லும் தேதியிலிருந்து 10 நாட்கள் முன்புவரை இந்தியாவில் இருந்திருக்க கூடாது.

இங்கிலாந்தின் இந்த முடிவால், இந்தியாவில் இருந்து யாரும் நேரடியாக இங்கிலாந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனம், வரும் 24 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை உள்ள அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT