Skip to main content

கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை முன்பு தர்ணா!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
AIADMK MLAs call for relief of corona

 

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும் தற்போது அதிகரித்து வருகின்றது. கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் குடும்ப அட்டை ஒன்றிற்கு 5000 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை முதலமைச்சரின் நிவாரண நிதி மூலமாக வழங்காததால் முதல்வர் நாராயணசாமியை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன் எம்.எல்.ஏ, "புதுச்சேரியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நோயின் அறிகுறி இல்லாமலேயே பரவி வருவதால் தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை சுகாதாரத்துறை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.  கரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாக நிலை குலைந்து போய் உள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் எந்த ஒரு நிதியுதவியும் வழங்கப்படவில்லை. அதேபோல் கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு நிதியோ அல்லது அன்றாட உணவிற்கான ஏற்பாடுகளையோ செய்யவில்லை.

 

கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டைச் சுற்றியுள்ள வீடுகளையும் கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு வருவதினால் அந்த இடத்தில் உள்ள குடும்பத்தினருக்கும் அரசு எந்த ஒரு நிதியுதவியோ அல்லது உணவுப் பொருட்களோ வழங்கவேண்டும், அதுவும் வழங்கவில்லை. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இதுபோன்று கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட ரூ.500 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் ஒரு முறை மட்டும் வழங்கி உதவி செய்தது. தற்போது மூன்று மாதங்களாக மாநிலம் முழுவதும் எந்த உதவியும் அரசு செய்யவில்லை.

 

அவர்களது வாழ்க்கையே சிறைப்பிடிக்கப்பட்ட வாழ்க்கையைப் போன்று உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை தகரம் கொண்டு அடைப்பது மட்டுமே அரசின் செயலாக உள்ளது. அதன்பிறகு என்ன ஆனார்கள் என்று எந்த ஒரு அதிகாரியும் திரும்பி கூட பார்ப்பதில்லை. அதனால் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் வசிக்கும் மக்கள் செய்வதறியாமல் பாலைவனத்தில் தண்ணிருக்கு ஏங்குவது போல் உள்ளனர். இது போன்ற ஒரு மிக, மிக முக்கியமான காலகட்டத்தில் அரசும், ஆளுநர் அலுவலகமும் இன்னமும் தங்களது வெறுப்பு உணர்ச்சிகளைதான் தினந்தோறும் வெளிக்காட்டிக் கொண்டு வருகிறார்கள்.

 

அரசு இந்த பிரச்சனையில் மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யாமல் ஒரு பார்வையாளராக மட்டுமே உள்ளது. இது என்ன நியாயம், இது  மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வைத் தான் ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த கட்டுப்பாட்டு மண்டல பகுதிக்குள் கொண்டுவரப்பட்டவர்களுக்கும், அன்றாட உணவுக்கு அரசு ஏதேனும் உதவிசெய்ய வேண்டும். ஆனால் அரசு செய்யவில்லை. தமிழகத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு 5,000 ரூபாய் தர வேண்டும் என வலியுறுத்துகின்றார்.

 

புதுச்சேரியில் தி.மு.க துணையோடு ஆட்சி நடத்தும் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் 3 லட்சம் குடும்பத்திற்கும் தலா 5,000 வழங்க அரசு ஏன் முன்வர கூடாது. அனைத்து குடும்பத்தினருக்கும் ஐந்தாயிரமும், கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உணவுப் பொருட்களும் போதிய மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்த உள்ளார்த்தமாக ஈடுபட்டு புதுச்சேரி மாநில மக்களை கரோனா பிடியிலிருந்து காப்பாற்றவும், அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளையும் செய்ய வேண்டும்"  என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.