Advertisment

மீண்டும் வாக்குச்சீட்டு முறையா? - என்ன சொல்கிறது பா.ஜ.க.?

மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் தீர்மானம் குறித்து பா.ஜ.க. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் 84ஆவது மாநாடு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் வாக்கு எந்திரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி, மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல்களை நடத்தவேண்டுமென்ற தீர்மானம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

Advertisment

இதுகுறித்து பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம் மாதவ் பேசுகையில், ‘தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவரும் விவகாரத்தில் ஒருமித்த கருத்துகள் வந்தபிறகுதான் அது குறித்த முடிவுகளை எடுக்கமுடியும் என்பதை காங்கிரஸுக்கு நினைவுப்படுத்துகிறேன். இனி வாக்குச்சீட்டு முறையையே பின்பற்ற வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் விரும்பும் பட்சத்தில், அனைவருடனும் சேர்ந்து ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Rahul gandhi Congress Plenary meet Ballot paper
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe