இதனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சாந்தினி குமாரி வீட்டை விட்டு வெளியேறி சாந்தன்குமாரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து, அந்த தம்பதியினர், தங்களது 2 வயது மகளுடன் வெளியூரில் வசித்து வந்தனர். இந்நிலையில், தனது பெற்றோரை பார்ப்பதற்காக சந்தன்குமாரும், சாந்தினி குமாரியும் தங்கள் குழந்தையுடன் நேற்று (10-01-24) மாலை நவ்டொலியா கிராமத்திற்கு வந்துள்ளனர்.
காதல் திருமணம் செய்துகொண்ட தன் மகள், அவரது கணவர் மற்றும் மகளுடன் ஊருக்குள் வந்ததை கண்ட சாந்தினி குமாரியின் தந்தை பப்பு சிங், அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர், ஆத்திரம் அடங்காத பப்பு சிங், தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் தனது மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகிய 3 பேரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த 3 பேரும் மயங்கி விழுந்தனர்.
இதனையடுத்து, அங்கு வந்த சகோதரர் திராஜ் சிங், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சகோதரி சாந்தினி குமாரி அவரது கணவர் சாந்தன் குமார் மற்றும் மகள் மீது சரமாரியாகச் சுட்டார். இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, பப்பு சிங் மற்றும் மகன் திராஜ் சிங்கும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியிருக்கின்ற 2 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.