Skip to main content

’அஃப்ரிடி இந்தியாவுக்கு விரோதமானவர்’- சிவசேனா 

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
shivsena


சமீபத்தில்தான் பாகிஸ்தானின் பிரதமராக பாக் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி ஏற்றுள்ளார். இருந்தாலும் பாகிஸ்தான் அரசியல் குழப்பங்கள் இன்றளவும் தீர்ந்தபாடில்லை. இம்ரான் கான் பிரதமராக வந்தபின்பும், காஷ்மீர் பிரச்சினை குறித்த தெளிவான பார்வை இல்லை. இதனால், தீர்க்கமுடியாத பிரச்சினையாக காஷ்மீர் இருந்து வருகிறது. மேலும் தீவிரவாத குழுக்களும் பாகிஸ்தானில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுறுவ அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்திய இராணுவம். 
 

இந்நிலையில் இங்கிலாந்து மாணவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியுள்ள பாக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சகித் அஃப்ரிடி, “ பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் வேண்டாம், இந்தியாவுக்கும் காஷ்மீர் வேண்டாம். பாகிஸ்தானால் நான்கு மாநிலங்களையே சமாளிக்க முடியவில்லை அதேபோல அதை இந்தியாவுக்கு தர வேண்டாம். அந்த மாநிலத்தை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். அவர்களுக்கு தேவைப்படுவது மனிதநேயம்தான். அந்த மக்கள் எதிர்பார்பது மனிதநேயம்தான். மக்கள் நாள்தோறும் உயிரிழந்துவருவது வேதனையாக இருக்கிறது. இந்து, முஸ்ஸிம் என எந்தச் சமூகத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும் அது வேதனைதான்” என்று தெரிவித்தார். இதற்கு முன்பாக கடந்த எப்ரல் மாதத்தில் கூட காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

இந்நிலையில், அஃப்ரிடியின் இந்த கருத்தை சிவசேனா வரவேற்றுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டான சாம்னாவில் இதுகுறித்து தெரிவித்தது: பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் உயிர்பெற்று சீராகச் செல்ல நிதி உதவி எனும் ஆக்சிஜன் அவசியம். அப்படி இருக்கும்போது, அந்த நாடு எப்படி காஷ்மீரை பாதுகாக்க முடியும். ஷாகித் அஃப்ரிடி மட்டுமல்ல, நடுநிலையான, புத்திசாலி பாகிஸ்தானியர்கள் அனைவரும் அப்ரிடி கூறிய கருத்துக்களை ஆதரிப்பார்கள், அதே சிந்தனையில்தான் இருப்பார்கள். அதேபோல பாகிஸ்தானிய வீரர் ஷாகித் அஃப்ரிடி என்பவர் இந்தியாவுக்கு விரோதமானவர்தான். ஏனென்றால், இதற்கு முந்தைய காலத்தில் அவர் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி இருக்கிறார். உதாரணமாக, இந்தியப் பகுதிக்குள் நுழைந்த 13 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றபோதிலும் கூட தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும், காஷ்மீரின் சுதந்திரத்துக்காகவும் பேசுகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Manohar Joshi passed away

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்.

மராட்டிய மாநிலம் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி. மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937 டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்தார் மனோகர் ஜோஷி. அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக கட்சிப் பணிகளில் இறங்கிய மனோகர் ஜோஷி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அவைகளுக்கும் தேர்வாகியுள்ளார்.

1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 1972 முதல் 1989 வரை மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2002-2004 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தார். தற்போது 86 வயதான நிலையில் மாரடைப்பு காரணமாக மும்பையில் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Next Story

“சட்டப்பேரவைத் தலைவர் அநீதிகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” - பிரியங்கா சதுர்வேதி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
 Priyanka Chaturvedi says Legislative Speaker People will give befitting response to injustices

மகாராஷ்டிராவில் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டுக்கு பின் சிவசேனா பிளவுபட்டு பாஜகவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் அமர்ந்தார். அவருடன் சென்ற 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்ரே சார்பில் முறையிட்டது.

இந்த கோரிக்கை மீது சபாநாயகர் ராகுல் நார்வேகர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சிவசேனா உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் சபாநாயகருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தகுதி நீக்கம் குறித்து இன்றைக்குள் முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதனையடுத்து, 'ஒரு கட்சி தலைவரின் விருப்பத்தை ஒரு கட்சியின் ஒட்டுமொத்த விருப்பமாக கருத முடியாது என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர், 'ஏக்நாத் ஷிண்டேதான் சிவசேனா கட்சியின் உண்மையான தலைவர். 2022 ஆம் ஆண்டு ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. ஷிண்டேவை சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவிற்கு அதிகாரம் இல்லை' என தெரிவித்தார்.

இந்த நிலையில், சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி இன்று (11-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகரின் முடிவு துர்திர்ஷ்டவசமானது மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தலைவர் செய்யும் அநீதிகளை மகாராஷ்டிரா மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்திற்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று கூறினார்.