Advertisment

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள், குழந்தைகள் படங்களை வெளியிடக் கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

rr

பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஒன்று வந்தது. முசாபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பான அந்த வழக்கில், பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிட பாட்னா ஐகோர்ட் தடை விதித்திருந்தது.

Advertisment

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா அமர்வு இன்று விசாரித்தது.

Advertisment

வழக்கு விசாரணையை அடுத்து, பாட்னா ஐகோர்ட் விதித்த தடையை நீக்கிய நீதிபதிகள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தனர்.

judgment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe