மேகதாது அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி மாநிலங்களவையில் அ.தி.மு.க அமளியில் ஈடுபட்டது. இதனால் இன்று முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் இது தொடர்பான அமளியில் அ.தி.மு.க வினர் ஈடுபட்டனர். பதாகைகளுடன் அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு நாடாளுமன்ற அலுவலகத்தில் அ.தி.மு.க எம்.பி கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேகதாது அணை தொடர்பான விவகாரம் ; மாநிலங்களவையில் அ.தி.மு.க அமளி
Advertisment