Published on 12/04/2022 | Edited on 12/04/2022

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இந்தியா அழைத்துவரப்பட்ட கல்லூரி மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி நிலையங்களின் தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE )இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள காலி இடங்கள் நடப்பாண்டிலேயே மாணவர்களைச் சேர்க்கை வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் பொறியியல் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு இந்தியா திரும்பிய மாணவர்கள் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.