Advertisment

அடி மேல் அடி; அதல பாதாளம் நோக்கி அதானி

adani

ஆசியாவின் நம்பர்ஒன்தொழிலதிபராக இருந்த கவுதம்அதானிநிறுவனங்களின் செயல்பாடுகளில் இருக்கும் வரி ஏய்ப்பு,ஹவாலாமோசடிகள் குறித்து ஆதாரங்களுடன்ஹிண்டன்பர்க்நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும்அதானிகுழுமத்தால் சரியான பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்துஅதானியின்பங்குகள்சரிவைசந்தித்தது.

Advertisment

ஹிண்டன்பர்க்நிறுவனம் ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில்அதானிகுழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால்அதானிகுழுமத்தின் பங்குகள் கடும்வீழ்ச்சியைச்சந்தித்தது.

Advertisment

இந்த நிலையில்இந்தியபங்குச் சந்தைகள் இன்று (22/2/2023) கணிசமான வீழ்ச்சியுடன் வர்த்தகமானது. இன்று காலை 10மணிக்குபங்குச் சந்தையின்சென்செக்ஸ்530 புள்ளிகள் சரிந்து60 ஆயிரத்து 141 புள்ளிகளில், தேசிய பங்குச் சந்தைநிஃப்டி162 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,664 புள்ளிகளில் வர்த்தகமானது. உள்நாட்டில் பணவீக்கம் உயர்வு, சர்வதேசப் பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்கள் பங்குச் சந்தைகள் சரிவில் காணப்பட்டது. சர்ச்சையில் மாட்டியஅதானிகுழுமம் இன்றும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின.

money Adani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe