Skip to main content

70 கோடியை வரியாக செலுத்திய நடிகர் !

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ஆவர். இவரின் திரைப்படங்கள் இந்திய மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்ப்பது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிந்தியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் , வட இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆவர். இவர் சமீப காலமாக பொது தொண்டு சேவையை செய்து வருகிறார். இதற்கு உதாரணமாக முஷாப்பர்பூர் , பீகார் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வங்கியில் கடன்களை பெற்று வங்கியில் கடனை திருப்பி செலுத்தாத ஏழை விவசாயிகள் சுமார் 2084 பேருக்கு விவசாய வங்கி கடன்களை நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் அடைத்தார். 

 

amitab bachan



மேலும் பிப்ரவரி 14 ஆம் தேதி உயிரிழந்த அனைத்து ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் தலா ரூபாய் 10 லட்சம் வழங்கினார். இது போன்ற பல சேவைகளை பாரபட்சம் பாராமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் வருமான வரியாக ரூபாய் 70 கோடியை அரசுக்கு செலுத்தியுள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் உதவியாளர் தெரிவித்துள்ளார். 

அதே சமயம் நன்கொடைக்கு மத்திய அரசு முழு வருமான வரி விலக்கு அளித்துள்ள போதிலும் ரூபாய் 70 கோடியை அரசுக்கு வரி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் சேவையை  பார்த்து மற்ற பாலிவுட் நடிகர் , நடிகைகளும் மக்களுக்கு தானாக முன் வந்து மக்கள் சேவைகள் செய்வதற்கு இனி வரும் காலங்களில் அதிக வாய்ப்பு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


பி.சந்தோஷ், சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.