Skip to main content

"2019 தேர்தலில் ஜனநாயகத்தை அபகரித்துவிட்டனர்" - மத்திய அரசு மீது காங். சரமாரி குற்றச்சாட்டு!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

congress

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம், விசாரணை குழு அமைத்துள்ளது.

 

இந்தநிலையில் இந்தநிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அந்தநாடுகள் அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்து விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில், 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக கூறியுள்ளது. இது இந்திய அரசியல் வட்டாரங்களில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெகாசஸை பயன்படுத்தியதன் மூலம் மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தநிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாவது: இஸ்ரேலிய உளவு மென்பொருளான பெகாசஸை சட்டவிரோதமாகவும்  அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் உளவு பார்க்க மோடி அரசு பயன்படுத்தி வந்தது, இதில் மோடிக்கும் சம்மந்தம் உள்ளது என நீண்டநாட்களாக கூறி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அவர்கள் மக்களின் பணத்தை, தங்களது சொந்த மக்களைக் உளவுபார்க்க பயன்படுத்தியுள்ளார்கள். 2019 மக்களவைத் தேர்தலின்போது ஜனநாயகத்தை அபகரித்துள்ளனர். இது தேசத்துரோகச் செயல்

 

பெகாசஸை வாங்கியது மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக நேரடியாக கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றத்தை மோடி அரசு தவறாக வழிநடத்தியுள்ளது. மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில், தன் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி மறுத்துள்ளது. பிரதமர் மோடியின் பயணத்தின்போது இஸ்ரேலிடம் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உளவு சாதனங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஒரு தொகுப்பின் மையப்பொருளாக மோடி அரசாங்கம் பெகாசஸ் உளவு மென்பொருளையும், பிற ராணுவ தொழில்நுட்பங்களையும் கடந்த 2017 ஆம் ஆண்டு வாங்கியுள்ளது. 2017-18ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் செயல்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் (NSCS) பட்ஜெட் 33 கோடி ரூபாயில் இருந்து 333 கோடி ரூபாயாக உயர்ந்தது தற்செயலான நிகழ்வு அல்ல.

 

ராகுல் காந்தி மற்றும் அவரது ஊழியர்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா மற்றும் எச்டி குமாரசாமி, பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய அமைச்சர் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், அவரது மனைவி மற்றும் ஊழியர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அவரது மனைவி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கான சிறப்பு அதிகாரி, மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையம், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், எல்லை பாதுகாப்பு படை தலைவர் கே.கே.சர்மா, ரா அதிகாரி ஜிதேந்தர் குமார் ஓஜா, அவரது மனைவி, இந்திய ராணுவ அதிகாரிகள் கர்னல் முகுல் தேவ் மற்றும் கர்னல் அமித் குமார் ஆகியோரை உளவு பார்க்க மோடி அரசு பெகாசஸை பயன்படுத்தியுள்ளது.

 

பெகாசஸ் உளவு மென்பொருள் இலக்கு பட்டியலில், வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும், தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, தி மின்ட், தி வயர், எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, டிவி18, தி ட்ரிப்யூன், அவுட்லுக், டிஎன்ஏ, நியூஸ்கிளிக் ஆகிய முக்கிய ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அரசாங்கம் பாராளுமன்றத்தை ஏமாற்றியுள்ளது. காங்கிரஸ் மற்ற எதிர்க்கட்சிகளுடன் பேசி, இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்த வியூகத்தை வகுக்கும். இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.