Advertisment

திருமண ஊர்வலத்தில் புகுந்த லாரி; 13 பேர் பலி, மேலும்...

hgjghjhgj

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் கட்டுபாட்டை இழந்த லாரி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்கார் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் சாலை பகுதியில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ராம்தேவ் கோவில் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த டிரக் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலம் நடந்த பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 18 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரதே பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

accident Rajasthan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe