Skip to main content

லாரிகளில் ஏ.சி.; மத்திய அமைச்சர் தகவல்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

A.C. in trucks; Union Minister Information

 

அனைத்து லாரி ஒட்டுநர்களின் வசதிக்காகக் குளிர்சாதனப் பெட்டி அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பதைத் தொடர்ந்து அதற்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர்.

 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “வரும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து லாரி ஓட்டுநர்களின் வசதிக்காக லாரியிலுள்ள கேபின்களில் குளிர்சாதனப் பெட்டி அமைப்பதாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது” என்று கூறியிருந்தார். இதற்கு லாரி ஓட்டுநர்கள்  மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வந்தது.

 

இந்நிலையில், இந்தியாவில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அதிகமான லாரிகள் பழைய என்ஜின்கள் கொண்டவை. இதனிடையே, பழைய என்ஜின் கொண்ட லாரிகளுக்கு கேபின்கள் திறந்த வெளியில் தான் இருக்கும். அதனால், லாரிகளுக்கு குளிர்சாதனப் பெட்டி அமைப்பதற்கு முன்னால் அந்த கேபின்களை மாற்றி புதிதாக ஒரு கேபினை அமைக்க வேண்டியிருக்கும்.

 

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ஒரு லாரியின் விலை குறைந்தபட்சம் ரூபாய் 50,000 முதல் 1,00,000 வரை அதிகமாகலாம். மேலும், குளிர் சாதன வசதி அமைத்தால் லாரிகளுக்கு டீசலின் தேவை அதிகமாக பிடிக்கும். இதனால் லாரி ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதனால், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

 

அதேசமயம், மத்திய அரசிடம் இருந்து இத்திட்டத்தைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி; அதிகாலையில் நிகழ்ந்த விபத்து

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Overturned truck on tracks; An early morning accident

கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி தமிழக எல்லையான கோட்டைவாசல்  பகுதியில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கேரளாவில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மலை பாதையில் சென்று கொண்டிருந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் கேரளாவின் ஆற்றுக்கரை பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகள் இல்லாத சிறப்பு ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. விபத்தை அறிந்தவர்கள் இரவு நேரத்தில் டார்ச் லைட் காட்டி ரயிலை நிறுத்தியுள்ளார்கள்.

அந்தப் பகுதியில் அதிகாலையில் அதிகமான ரயில் போக்குவரத்துகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலானது செங்கோட்டையிலிருந்து 4 மணிக்கு புறப்படும். அந்த ரயில் இந்த விபத்து காரணமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது ரயில் போக்குவரத்து அந்த பகுதியில் சீரானது. இருப்பினும் மூன்று மணி நேரம் தாமதமாக எழும்பூர்-கொல்லம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.