Skip to main content

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் உரிமம் இல்லாத இரண்டு துப்பாக்கிகள் சிக்கியது; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

AAP MLA arrested with two unlicensed guns in anti-graft department raid

 

இஸ்லாமிய மக்கள் அவர்களின் சொத்துக்களை வக்பு பத்திரம் மூலம் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கு  தானமாக கொடுக்க முடியும். அவ்வாறு கொடுக்கும் வழக்கம் உண்டு. அப்படி மக்களால் வக்பு பத்திரத்தின் மூலம் கொடுக்கப்படும் சொத்துக்கள் மற்றும் நிலங்களை நிர்வகிக்கவும் பராமரிக்கவும் தனியார் நிறுவனங்களும் பொது நிறுவனங்களும் செயல்படுகின்றது.

 

இதனிடையே டெல்லியில் வக்பு வாரிய நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத்துல்லா கான் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். 

 

டெல்லியின் ஆக்லா தொகுதியின் எம்.எல்.ஏவான ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமனத்துல்லா கான் வக்பு வாரிய தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இதனிடையே வக்பு வாரிய பணி நியமனத்தில் முறைகேடுகள் செய்ததாக அவரின் மீது புகார் எழுந்தது.

 

புகாரின் பேரில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமனத்தில்லா கானின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது 24 லட்சம் மற்றும் உரிமம் இல்லாத இரு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அமனத்துல்லா கானை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

 

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்ய முற்படுகையில் அமனத்துல்லா கானின் உறவினர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.