Advertisment

ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக தொகுதிகள் - கருத்துக்கணிப்பில் தகவல்!

டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, மற்றும் காங்கிரஸ் என மூன்று முக்கிய கட்சிகளும் தனித்து நின்று மும்முனை போட்டியை ஏற்படுத்தினாலும், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேதான் டெல்லியில் கடும் போட்டி நிலவி வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Advertisment

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளிவர துவங்கியுள்ளது. அதில் ஆம் ஆத்மி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி மட்டும் 46 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு 22 முதல் 24 தொகுதிகள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
aap
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe