Skip to main content

குஜராத் தேர்தலில் காங்கிரசை பின்னுக்குத் தள்ளி முன்னேறும் ஆம் ஆத்மி

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 
- தெ.சு.கவுதமன்

 

BJP

 

குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில்  நடைபெற உள்ளதால், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளன. இம்முறை அங்கே பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

காங்கிரஸ் தரப்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், ராகுல் காந்தி இங்கு பிரச்சாரம் செய்வதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் நடைப் பயணத்தில் மட்டுமே தீவிர கவனத்தில் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களின் உற்சாகத்தைக் குறைத்துள்ளது. ஆம் ஆத்மி தரப்பில் கெஜ்ரிவால் தீவிரப் பிரச்சாரத்தில் உள்ளார்.

 

BJP

 

குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு இந்தத் தேர்தல் சவாலானதாக இருக்குமா என்று பார்த்தால், அதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. கடந்த சில தேர்தல்களில் பா.ஜ.க.வா? காங்கிரஸா? என்றிருந்த களத்தில் இம்முறை ஆம் ஆத்மி பெரும் நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. பா.ஜ.க. 49% வாக்குகளையும், காங்கிரஸ் 41% வாக்குகளையும் பெற்றிருந்தது.

 

கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடைந்திருக்கிறது. அதேவேளை ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் காங்கிரஸை வாஸ் அவுட் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. எனவே ஆம் ஆத்மி கட்சி மீதான நம்பிக்கை, தற்போது குஜராத் வாக்காளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ் என்ற நிலை மாறி, தற்போது பா.ஜ.க.வுக்கு மாற்றுக் கட்சியாக ஆம் ஆத்மி வளர்ச்சியடைந்து வருகிறது. இது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியைத்தான் பெருமளவு பாதிக்கிறது.

 

BJP

 

கொள்கை ரீதியாகப் பார்க்கும்போதும், பா.ஜ.க. தன்னை இந்துத்துவா கட்சியாகக் காட்டிக்கொள்வதுபோல் ஆம் ஆத்மியும் தன்னை இந்துத்துவா கட்சியாகத்தான் முன்னிறுத்துகிறது. அதேவேளை, பண மதிப்பிழப்பு, பொருளாதாரச்சரிவு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது போன்றவற்றால் பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பும் வாக்காளர்களை மொத்தமாக ஆம் ஆத்மி அறுவடை செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் புதிதாக வாக்களிக்கும் இளைஞர்களின் நம்பிக்கையையும் ஆம் ஆத்மி பெற்று வருகிறது.

 

குஜராத்தில் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்கள் தொகை 20% என்ற அளவில் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 40% ஆக உள்ளது. இவர்களைக் குறிவைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளார். பா.ஜ.க.வின் ஜி.எஸ்.டி. கொள்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை கெஜ்ரிவால் வைத்து வருகிறார். கடந்த 27 ஆண்டுகளாக இம்மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி செய்தும், இன்னும் மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத கிராமங்கள் அதிகமிருப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக 800 கோடி ரூபாய்க்கு விலை பேசியதையும் சுட்டிக்காட்டிப் பேசி வருகிறார். அவரது பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

BJP

 

பா.ஜ.க.வோ தனது பிரச்சாரத்தில் ஆம் ஆத்மியைவிட காங்கிரசைத்தான் வழக்கம்போல் டார்கெட் செய்து வருகிறது. இப்படியான சூழலில், பா.ஜ.க.வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் 20% அளவுக்கு ஆம் ஆத்மி பாதிப்பை ஏற்படுத்துமென்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கே அதிக சாதகமாக இருக்கும் என்பதால் இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், முதல் கட்டத்தில் பா.ஜ.க.வை எதிர்க்கும் ஆம் ஆத்மி, இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியிலும் சேதத்தை அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இன்றைய சூழலில் ஆம் ஆத்மி எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிக்கப்போகிறது. எந்தெந்த கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே குஜராத் தேர்தல் முடிவுகள் இருக்குமென்று தெரிகிறது. குஜராத் தேர்தல் முடிவில் காங்கிரசை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆம் ஆத்மி இரண்டாமிடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக, ஆம் ஆத்மியால் காங்கிரசுக்குத்தான் பெரிய ஆப்பு என்பது உறுதியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.