Aam Aadmi MP Sanjay Singh incident

Advertisment

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை டெல்லியில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளதுள்ளனர்.

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப்புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்திருந்தது. அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து சஞ்சய் சிங், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.