Advertisment

புதுவையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயமல்ல - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

hj

Advertisment

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி, ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களைச் சந்திந்தார். அப்போது, "புதுவையில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கட்டாயமில்லை. அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால் போதுமானது. புதுவைக்கு மத்திய அரசு 1.10 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது" என்றார்.

coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe