Skip to main content

கூகுளில் கொட்டிக் கிடக்கும் ஆதார் விவரங்கள்! - மீண்டும் மழுப்பும் ஆதார் ஆணையம்

Published on 18/03/2018 | Edited on 18/03/2018

கூகுளில் எக்கச்சக்கமான ஆதார் விவரங்கள் கிடைத்துள்ள சம்பவம் மீண்டும் ஆதார் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது.

 

மொபைல் எண், அரசு நலத்திட்ட உதவிகள், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தையும் ஆதாரோடு இணைக்கச் சொல்லி கடந்த பல மாதங்களாக அறிவுறுத்தி, மார்ச் 31ஆம் தேதியை காலக்கெடுவாகவும் அறிவித்தது மத்திய அரசு. இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வரும்வரையில் காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

 

Aadhaar

 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆதார் விவரங்கள் இணையதளங்களில் கிடைப்பதாக புகார்கள் வெளிவருவதும், அதை ஆதார் ஆணையம் மறுப்பதுமாக நகர்ந்துகொண்டிருந்தது. தற்போது தேடுதளமான கூகுளில் Mera Aadhaar meri pehchan filetype:pdf என்று பதிவிட்டு தேடினால் வரும் லிங்குகளில் ஏராளமான ஆதார் விவரங்கள் கொட்டிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவல் பெறப்பட்ட சில மணிநேரங்களில் எல்லா லிங்குகளும் செயலிழந்துவிட்டன.

 

இதுகுறித்து பதிலளித்துள்ள ஆதார் ஆணையம், எங்களது டேட்டாபேஸில் இருந்து எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்ற மழுப்பலான பதிலை அளித்திருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

 

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!


தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பூத் அளவிலான வாக்காளர்களுக்கு பாஜக வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு இணைப்புடன் (லிங்) குறுஞ்செய்திகள் வருவதாகக் கூறியுள்ளார்.


மேலும் அவர், ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணில் மட்டுமே அவ்வாறான குறுஞ்செய்திகள் வருவதாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆதார் தகவல்களைத் திருடியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகார் மிகத் தீவிரமானது எனக் கூறி, இதுகுறித்து விசாரித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

 

Next Story

”தனிநபர் உரிமைகளை மறுக்கக்கூடாது” -ஆதார் வழக்கில் நீதிபதி

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
adhar


”வங்கி கணக்குகளுக்கும், மொபைல் இணைப்பு சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் இல்லை. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம். தனிநபர் கண்ணியம் காக்க ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும். குறைந்த, அத்தியாவசிய தகவல்களே ஆதாருக்காகப் பெறப்படுகிறது.ஆதார் எண்னை போலியாக உருவாக்க முடியாது.நீட்,சிபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது. பான் கார்டுக்கு ஆதார் கார்ட் அவசியம். பள்ளிச் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயம கிடையாது. ஆதாருக்காகப் பெறப்படும் தகவல்கள் குறைவு, நன்மைகள் அதிகம்” என்று நீதிபதி ஏ.கே சிக்ரி தெரிவித்தார்.
 

அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் மறுக்கப்பட கூடது, அதேபோல, யாருக்கும் அரசின் சலுகைகளும் மறுக்கப்படக் கூடாது என்று தீபக் மிஸ்ரா தலைமையில் அடங்கிய ஐந்து பேர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு தெரிவித்துள்ளது.