நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மாணவர்கள் மற்றும் அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 879 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்திரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 5,312 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.