தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக உதவியாளர் ஒருவரிடம் சரியான ஆவணங்கள் இன்றி 8 கோடி ரூபாய் பணத்தை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி நாராயண்குடா பகுதியில் வந்த ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த பணத்தை கொண்டு வந்தவர்கள், இந்த பணம் பாஜக உதவியாளர் கோபி என்பவருடைய பணம் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கோபியை தேடி வங்கிக்கு போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அப்போது கோபியுடன் ரூ. 6 கோடி பணத்துடன் 4 பேர் அங்கு நின்றுள்ளார். அவர்களிடம் பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் ரூ. 8 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பாஜக சார்பில் தேர்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.