Skip to main content

தீபாவளிக்கு அடித்த ஜாக்பாட் - ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

g


ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 78 நாள் போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ரயில்வே போனஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், " மத்திய ரயில்வே துறை ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும். இதன்மூலம் 11.56 லட்சம் பேர் பயனடைவார்கள்" என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Bonus notification for sugar factory workers

 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி || ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

 

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில்  பணிபுரியும் சுமார் 6103 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு  2022-2023  ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.415.30 லட்சங்கள் செலவினம் ஏற்படும்” என தெரிவிக்கபட்டுள்ளது. 

 

 

Next Story

நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Bonus notification for Consumer Goods Corporation employees

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் 8.33% மற்றும் கருணைத் தொகை 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

 

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49 ஆயிரத்து 23 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.