Skip to main content

"அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை"- முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு...

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

 

75TH INDEPENDENCE DAY OF INDIA CELEBRATION PUDUCHERRY CHIEF MINISTER SPEECH

 

இந்திய நாட்டின் 75- ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

 

அப்போது சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரி மாநிலம் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது என உணர்ந்து, அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி மக்களுக்கு தேவையான, தரமான காய்கறிகளை அவர்கள் வீட்டு மாடியிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் அமைக்க 200 மதிப்புள்ள காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 2,000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை பசுமையான புதுச்சேரியாக மாற்றும் வகையில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடப்பட்டுள்ளது.

75TH INDEPENDENCE DAY OF INDIA CELEBRATION PUDUCHERRY CHIEF MINISTER SPEECH

புதுச்சேரியில் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், விதவைகள், திருநங்கைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அனைத்து அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

 

புதுச்சேரியில் பாரம்பரியமிக்க எட்டு வழிச்சாலையை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகரம் முழுவதும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.

75TH INDEPENDENCE DAY OF INDIA CELEBRATION PUDUCHERRY CHIEF MINISTER SPEECH

கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கரோனா இல்லாத மாநிலமாக மாற்ற புதுச்சேரி மற்றும் தமிழக அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்" என்று கூறினார்.

 

விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அரசுத்துறை உயரதிகாரிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.