ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிய போது, 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க மரியாதைச் செலுத்தப்பட்டது.
வழக்கமாக வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பீரங்கிகள் மூலம் குண்டுகள் வெடித்து, மரியாதைச் செலுத்தப்படும் நிலையில், இந்த முறை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ATAGS howitzer' என்ற பீரங்கிகள் மூலம் 21 முறை குண்டுகள் வெடித்து, தேசிய கொடிக்கு மரியாதைச் செலுத்தப்பட்டது. இந்த பீரங்கியை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments