Skip to main content

75 வயதில் தொழிலதிபருக்கு இரண்டாவது திருமணம்

Published on 19/11/2022 | Edited on 21/11/2022

 

Tamil Nadu government has decided to give saree and vetti in a new design!

 

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள ஹுப்பள்ளி நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபரும், அரசியல் பிரமுகருமான சௌகான். இவரது நான்கு மகன்களுக்கும் திருமணம் முடிந்து மருமகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரன்கள் என மொத்தம் 27 பேர் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், சௌகானின் மனைவி சாரதாபாய் மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். மனைவியின் மறைவுக்கு பிறகு மன உளைச்சலில் இருந்த முதியவர் டி.கே.சவுகானுக்கு, மற்றொரு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, மூன்று மாதங்கள் கழித்து இறந்து போன சாரதாபாயின் மூத்த சகோதரி அனுஷ்யாவை டி.கே.சவுகானுக்கு மணமுடித்து வைத்தனர். 

 

குடும்பத்தினர்கள் ஒன்றிணைந்து தாத்தா, பாட்டியின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளனர். திருமணத்தில் குடும்பத்தினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

 

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சௌகான், "திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்றால், மனைவியை இழந்து தனிமையில் உள்ள நபர்களிடம் கேளுங்கள், அதன் வலி என்ன என்று. மனைவி இல்லாமல் வீடு என்பது கிடையாது. திருமணம் வெறும் காதலுக்காக மட்டுமல்ல. அனைத்து விதத்திலும் ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டு உதவியாக இருப்பது. அதன் அடிப்படையில் நான் திருமணம் செய்து கொண்டேன்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

பெங்களூர் சம்பவம்; மண்ணடியில் என்.ஐ.ஏ. சோதனை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Bangalore Incident; NIA raids mannadi

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில், அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பான விசாரணையில் அது குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணையைக் கையில் எடுத்துள்ள நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் அப்துல்லா என்பவர் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை தற்போது சோதனை நடத்தி வருகிறது. பெங்களூர் வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கியிருந்ததாக முன்பு தகவல்கள் வெளிவந்த நிலையில், மண்ணடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ சோதனை தற்பொழுது நடைபெற்று வருகிறது.