Skip to main content

5 நாட்களில் 745 கோடி - சர்ச்சையில் சிக்கிய அமித்ஷா

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
bjp

 

 

 

பாஜக தலைவர் அமித்ஷா இயக்குனராக இருந்துவந்த கூட்டுறவு வங்கி பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்தபோது ரூ. 754 கோடி செல்லா நோட்டுகளை வாங்கியதாக வந்த தகவல் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நாடுமுழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 10- ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 30-ஆம் தேதிவரை வங்கி கணக்குகளில் செல்லா நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

 

பொதுத்துறை வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள்,மாவட்ட கூட்டுறவு வங்கிகள் என அனைத்திலும் செல்லா நோட்டுகள் வாங்கப்படும் என முதலில் அறிவித்த மத்திய அரசு மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் செல்லா நோட்டுகள் வாங்கப்படும் பொழுது கருப்புபணமும் அதில் கலக்கப்படும் என்ற சந்தேகத்தில் நான்கு நாட்களில் அதாவது நவம்பர் 14-ஆம் தேதியே மாவட்ட கூட்டுறவு வங்கியில் செல்லா நோட்டுகளை மாற்ற அனுமதி மறுத்துவிட்டது.

 

 

 

தற்போது மும்பையை சேர்ந்த மனோரஞ்சன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுத்துறை ,மாநில கூட்டுறவு, மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு செல்லா நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது என்ற கேள்வியை கேட்டிருந்தார். அது தொடர்பாக மொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் 7 வங்கிகள் மட்டுமே பதிலளித்துள்ளன மற்ற 14 வங்கிகள் பதிலளிக்க மறுத்துள்ளன. கிடைத்த தகவலில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மட்டும் அதிகப்படியாக 745 கோடியே 59  லட்சம் செல்லா நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குனர் பாஜக தலைவர் அமித்ஷா என்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷா கடந்த 2000-ஆம் ஆண்டு அந்த கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

 

அதேபோல் இரண்டாவது இடத்தில் 693 கோடியே 19 லட்சம் செல்லா நோட்டுகளை பெற்ற ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வாங்கி உள்ளது. அந்த வங்கியின் தலைவர் குஜராத் மாநில மந்திரி ஜெயேஷ்ப்பாய் வித்தல்பாய் ராடாடியா ஆவார்.

 

பாஜக அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கத்தில் பாஜக தலைவர் இயக்குனராக இருக்கும் மாவட்ட கூட்டுறவு வங்கி அதிக நோட்டுகளை மாற்றி இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது எனவும் மனோரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.