Skip to main content

70,000 கோடிக்கு ராணுவத் தளவாடங்கள் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

70,000 crore rupees approval for purchase of military tracks-Ministry of Defense decision

 

70,000 கோடி ரூபாய் மதிப்பில் ராணுவத் தளவாடங்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

 

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில் இன்று பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குழு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வந்த நிலையில் பல்வேறு பரிசீலனைகளையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் இக்கூட்டத்தில் மொத்தம் 70 ஆயிரம் கோடி ரூபாயில் ராணுவத் தளவாடங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

கடற்படைக்காக எச்ஏஎல் நிறுவனத்திடம் 32 ஆயிரம் கோடி மதிப்பில் 60 யுட்டிலிட்டி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு கப்பற்படைக்கு வழங்கப்படும். அதேபோல் சூப்பர்சோனி ஏவுகணைகள், கடற்படைக்கு நெடுந்தூரம் தாக்கக்கூடிய ப்ரமோகிஸ் ஏவுகணைகள், ராணுவத்திற்கு 307 நவீன ஏடிஏஜிஎஸ் ஹோவிட்சர் பீரங்கிகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கு 9 துருவ் ரக ஹெலிகாப்டர்கள் வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இதை பிரதமர் சார்பில் கூறுகிறேன்''- சென்னையில் ராஜ்நாத் சிங் பேட்டி

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Minister Rajnath Singh consults with Chief Minister M.K.Stalin

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (07.12.2023) டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். பின்னர் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் சென்றனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Minister Rajnath Singh consults with Chief Minister M.K.Stalin

 

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், 'தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. புயல் நிவாரண நிதியாக முதற்கட்டமாக மத்திய அரசு 450 கோடியை விடுவித்துள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகள் தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் மனுவாக அளித்துள்ளேன்' என்றார்.

 

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 'தமிழக மக்களின் பாதிப்பை அறிந்ததும் பிரதமர் மோடி கவலை அடைந்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழு தமிழகம் வரும். சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்காக 521.29 கோடி ரூபாய் வழங்கப்படும். புயல் பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்பதை பிரதமர் சார்பில் கூறுகிறேன். தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும்' என்றார்.

 

 

 

 

Next Story

சென்னை வந்து சேர்ந்த ராஜ்நாத் சிங்; தமிழகத்திற்கு 450 கோடி அறிவிப்பு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Rajnath Singh who arrived in Chennai; 450 crore announcement for Tamil Nadu

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று 07.12.2023 தற்போது டெல்லியில் இருந்து வந்தடைந்தார். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

 

முன்னதாக புயல் பாதிப்புகளை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதம் அடைந்திருக்கிறது. இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்கக் கோரியும், புயல், வெள்ள பாதிப்பு குறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் விவர செய்தி அறிக்கை அளிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த உரையாடலில் தமிழகத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 450 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.